kerala-logo

‘புஷ்பா 2’ டிரெய்லர் ரிலீஸுக்கு வந்த கூட்டம்… இது மிகப்பெரிய விஷயம் அல்ல – சித்தார்த் சர்ச்சை பேச்சு


நடிகர் சித்தார்த் நடித்துள்ள மிஸ் யூ படம் டிசம்பர் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், ‘புஷ்பா 2’ டிரெய்லர் ரிலீஸுக்கு வந்த கூட்டம் குறித்த கேள்விக்கு,  “இந்தியாவில் கூட்டம் கூடுவது என்பது மிகப்பெரிய விஷயம் அல்ல” என்று கூறியுள்ளார்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5-ம் தேதி வெளியாகி பாக்ஸ் ஆஃபீஸ் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்த திரைப்படம் வெளியாகி வெறும் 5 நாட்களில் ரூ.900 கோடிக்கு வசூல் செய்துள்ளது. இதனால், புஷ்பா 2 திரைப்படம் மிக எளிதாக ரூ.1000 கோடி வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, புஷ்பா 2 திரைப்படத்தின் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா பாட்னாவில் நடைபெற்றது. அதில் ஆயிரக்கனக்கான மக்கள் கலந்துகொண்டனர். இது குறித்து அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றில் நடைபெற்ற பேட்டியில், நடிகர் சித்தார்த்திடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சித்தார்த்  “இந்தியாவில் கூட்டம் கூடுவது என்பது மிகப்பெரிய விஷயம் அல்ல” என்று கூறியுள்ளார்.
மேலும்,  “கட்டுமான பணிகளுக்காக ஒரு ஜே.சி.பி கொண்டு வந்து நிறுத்தினால் கூட கூட்டம் கூடும். பாட்னாவில் அவ்வளவு பெரிய கூட்டம் கூடியதற்கு மார்கெட்டிங் தான் காரணம். ஒரு பெரிய மைதானம் ஏற்பாடு செய்தால் கூட்டம் கூடும் . இந்தியாவில் கூட்டம் கூடுவதற்கும் குவாலிட்டிக்கும் சம்பதந்தம் இல்லை. அப்படி பார்த்தால் எல்லா அரசியல் கட்சிக்கும் தான் கூட்டம் கூடுது எல்லாம் அரசியல் கட்சி ஏன் ஜெயிக்கல. எல்லோருக்கும் கூட்டம் கூடத்தானே செய்கிறது. ஆகவே, கரகோஷமும், கூட்டம் கூடுவதும் இயல்பு. அதனால், கூட்டத்தை வைத்து அந்த படம் வெற்றி பெறும் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது” என்று கூறியுள்ளார். நடிகர் சித்தார்த் பேசிய வீடியோ இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
நடிகர் சித்தார்த் நடித்த சித்தா திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், சித்தார்த் நடித்துள்ள மிஸ் யூ படம் டிசம்பர் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Kerala Lottery Result
Tops