kerala-logo

அடிமையாக்க நினைக்கும் வில்லி: மாட்டுவாரா ஹீரோ? அண்ணா ஆக்ஷன் என்ன?


சௌந்திரபாண்டிக்கு சண்முகம் வைக்க போகும் செக்மேட்.. பரணி செய்யும் லவ் டார்ச்சர் – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில்  பரணி சண்முகத்தின் தவத்தை கலைக்கிறேன் என சவால் விட்ட நிலையில் இன்று, பரணி வேண்டும் என்றே சண்முகத்தை உசுப்பேற்றுவது போல் அவன் முன் நடப்பதும் பார்ப்பதுமாக இருக்கிறாள். இதனால் சண்முகம் சஷ்டி விரதத்தில் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கிறான்.
அடுத்து இசக்கியிடம் இருந்து 4 மிஸ் கால் வந்து இருக்க சண்முகம் பதறி போய் அவளுக்கு போன் போட இசக்கி வலியை மறைக்க முடியாமல் சௌந்தரபாண்டியன் தன்னை கொளுத்த முயன்ற விஷயத்தை சொல்கிறாள். இதனால் ஆவேசமாய் சண்முகம் சௌந்தரபாண்டியன் வீட்டுக்கு வருகிறான். வீட்டுக்கு வந்த சண்முகம் இசக்கியை தன்னுடன் வந்துடு என அழைக்கிறான்.
சௌந்தரபாண்டியன் அப்படி கூட்டிட்டு போனா உன் தங்கச்சி வாழா வெட்டியாகி விடுவாள் என நக்கல் அடிக்க சண்முகம் ஒரு முடிவெடுத்து அங்கிருந்து கிளம்பி வருகிறான். வீட்டுக்கு வந்ததும் வைகுண்டம் ஏண்டா இசக்கியை விட்டுட்டு வந்த என கோபப்பட பரணி அவனை ஏன் ஏத்தி விடுறீங்க.. அவன் சரியாக தான் செய்து இருக்கேன் என சொல்ல சண்முகம் அமைதியாகவே இருக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கார்த்தியை அடிமையாக்க துடிக்கும் சாமுண்டீஸ்வரி.. கார்த்திக் கொடுத்த பதிலடி – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் சாமுண்டீஸ்வரிக்காக விளையாடி ஜெயித்து சாமுண்டீஸ்வரி வழங்கிய பரிசை நிராகரித்த நிலையில், சாமுண்டீஸ்வரியின் முதல் மகள் காட்டப்படுகிறாள். அவளை மயில் வாகனம் என்பவர் பின் தொடர்ந்து வருகிறார். ஒரு கட்டத்தில் கையைப் பிடித்து இழுக்க அதை பார்த்து எல்லோரும் மயில் வாகனத்தை அடிக்க சாமுண்டீஸ்வரியின் மகள் அது என் கணவர் தான் என தடுத்து நிறுத்துகிறார்.
இதை தொடர்ந்து சாமுண்டீஸ்வரியின் கடைசி மகள் ஸ்வேதா திருவிழாவில் பாட்டு பாட இந்த குரலை கேட்ட ராஜராஜன் ஸ்வேதா பாடினால் சாமுண்டீஸ்வரிக்கு பிடிக்காது என்பதால் தடுத்து நிறுத்த ஓடி வர சாமுண்டீஸ்வரியும் குரலை கேட்டு சந்தேகத்துடன் ஓடி வருகிறாள். கடைசியாக மயில் வாகனம் ஸ்வேதா பாடுவதை மறைத்து விடுகிறான்.
அதன் பிறகு சாமுண்டீஸ்வரி தன்னிடம் திமிராய் நடந்து கொண்ட கார்த்தியை தனக்கு கீழே வேலை செய்ய வைக்க வேண்டும் என சொல்ல சந்திரகலா இது குறித்து கார்த்தியிடம் பேச செல்கிறாள். ஆனால் கார்த்திக் எனக்கு வேற வேலை இருக்கு.. திமிர் புடிச்ச சாமுண்டீஸ்வரி கிட்ட வேலை பார்க்க முடியாது என பதிலடி கொடுக்கிறான்.
அதன் பிறகு சந்திரகலா சாமுண்டீஸ்வரி எதிரியான சிவனாண்டியை சந்திக்கிறாள். இறுதியில் சிவனாண்டி மனைவி தான் சந்திரகலா.. சாமுண்டீஸ்வரியை வேவு பார்ப்பதற்காக அவளுடன் இருக்கிறாள் என்பது தெரிய வருகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Kerala Lottery Result
Tops