தமிழ் சினிமாவில் நடிகைகளை விட நடிகர்கள் உயர்வாக நடத்தப்படுவது சினிமா தொடங்கிய காலக்கட்டத்தில் இருந்து வழக்கமான நிகழ்வு ஆகும். ஹீரோக்களுக்கு பிடிக்காத விஷயங்களை செய்த நடிகைகள் படத்தில் இருந்தே நீக்கப்பட்ட சம்பவங்கள் கூட நடந்துள்ளன. அதேபோல் ஒரு நிகழ்வு எம்.ஜி.ஆர் படத்திலும் நிகழ்ந்துள்ளது என்பது பலரும் அறியாத ஒரு தகவலாக இருக்கலாம்.
தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி போன்ற மாமேதை நடிகர்களுக்கு நிலையான இடத்தை பெற்றிருந்த சமயத்தில், சவுகார் ஜானகி முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்தார். குறிப்பாக, சிவாஜியுடன் உயர்ந்த மனிதன், புதிய பறவை, பாவை விளக்கு, பாலும் பழமும் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்த சவுகார் ஜானகி, எம்.ஜி.ஆருடன் கலவையாக கொஞ்சமே படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
திரையுலகில் தான் நடிக்க வந்த புதிதில், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்திருந்த சவுகார் ஜானகி, எம்.ஜி.ஆர் சிவாஜி என்றும் நடிக்கும் முன்பே எம்.ஆர்.ராதாவுடன் சில வெற்றிப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படங்களும் வெற்றியை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 1931-ம் ஆண்டு பிறந்த சவுகார் ஜானகி, 1950-ம் ஆண்டு தெலுங்கு படமான சவுகாரு மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
அன்று முதல் சவுகார் ஜானகி என்று அழைக்கப்பட்ட இவர், 1952-ம் ஆண்டு “வளையாபதி” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 10 வருட இடைவெளிக்கு பிறகு,சவுகார் ஜானகிக்கு எம்.ஜி.ஆருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 1962-ம் ஆண்டு வள்ளிநாயகம் தயாரிப்பில், எஸ்.ஏ.சுப்புராமன் இயக்கத்தில் வெளியான மாடப்புறா படத்தில் எம்.ஜி.ஆர்க்கு நாயகியாக சவுகார் ஜானகி நடிக்க ஏற்ப்பட்டிருந்தார்.
முதல் நாள் படப்பிடிப்பில், சவுகார் ஜானகி கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார். அப்போது ஸ்டூடியோவுக்குள் நுழைந்த எம்.
.ஜி.ஆருக்கு எழுந்து நின்று வணக்கம் சொன்ன சவுகார் ஜானகி மீண்டும் அமர்ந்து கால்மேல் கால் போட்டிருந்தார். இதனை தூரத்தில் இருந்து கவனித்து பார்த்த எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதாவை அழைத்து “எனக்கு பிடிக்கவே இல்லை, என்ன இந்த பொண்ணு கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கிறார்?” என்று கேட்டுள்ளார்.
இதனை கேட்ட எம்.ஆர்.ராதா, “அவர் எங்க கலை இங்கிலாந்தில் பிறக்க வேண்டியவர், அப்படி உட்காந்திருந்தாலும் தப்பில்லை. நல்ல பொண்ணு இது.” என்றாலும், எம்.ஜி.ஆர் இறுதியில் சவுகார் ஜானகியை அந்த படத்திலிருந்து நீக்க முடிவு செய்தார்.
அதன்பிறகு, 3 வருடங்களுக்கு பின்னர், எம்.ஜி.ஆர் நடிப்பில், டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் வெளியான பணம் படைத்தவன் படத்தில் மீண்டும் சவுகார் ஜானகி, எம்.ஜி.ஆருடன் நாயகியாக நடித்தார். இந்த படத்தில் டி.ஆர்.ராமண்ணா, எம்.ஜி.ஆருடன் பேசி, சவுகார் ஜானகியை அந்த படத்தில் நடிக்க வைத்தார். படம் பெரிய வெற்றியை சீக்கியது.
மாடப்புறா படத்தில் நடந்த சம்பவத்தை பற்றி சவுகார் ஜானகி ஒரு பேட்டியில் கூறியதாவது, “மாடப்புறா படத்தில் என் தவறு உணர்ந்திருப்பாரை என நினைக்கிறேன். ஆனால், அப்போது என்னை நீக்குவதின் பின்னணி இதுதான்”.