லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த், டிசம்பர் 12-ந் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ள நிலையில், அன்றைய தினம் புதிய பட அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும், இந்த படத்தில் 34 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு இயக்குனருடன் ரஜினிகாந்த் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். மிஸ்டர் பாரத் படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் சத்யராஜ் இணைந்து நடிக்கும் இந்த படத்தில், தெலுங்கு நடிகர் ராகர்ஜூனா, கன்னட நடிகர் உபேந்திரா, உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தாயரித்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் அடுத்து ஜெயிலர் படத்தின்
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், ஜெயிலர் படத்தின் 2-ம் பாகத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12-ந் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அன்றைய தினம் ரஜினிகாந்த் நடிக்க உள்ள மற்றொரு படத்தின் அறிவிப்பும் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 1991-ம் ஆண்டு வெளியான தளபதி படம் ரஜினிகாந்துக்கு பெரிய வெற்றியை கொடுத்த படமாக இருக்கிறது. இந்த படத்தை இயக்கிய இயக்குனர் மணிரத்னம், அதன்பிறகு ரஜினியுடன் இணைந்து படம் பண்ணாத நிலையில், தற்போது 34 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் மீண்டும் இணைய உள்ளதாகவும், இந்த படத்தின் அறிவிப்பு, வெளியாக உள்ளததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நாயகன் படத்திற்கு பிறகு 37 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசனுடன் இணைந்துள்ள மணிரத்னம் தக்லைப் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ள நிலையில், இந்த படத்திற்கு பிறகு மணிரத்னம் ரஜினிகாந்துடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
