தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் அர்ஜுன். அவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா, சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்தார். இதில் கன்னடத்தில் ஒரு படம் மற்றும் தமிழில் இரண்டு திரைப்படங்களில் நடித்திருந்தார். அத்துடன் பிற படங்களில் நடிக்காமல் இருப்பது அவரது ரசிகர்களுக்கு பின்னடைவாக இருந்தது.
அர்ஜுன் ஒரு முக்கிய நடிகராக தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி, தற்போது நெகட்டிவ் ரோல், குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதியும் காதலித்து வந்தார்கள். அவர்களின் காதலை இரு குடும்பங்களும் சம்மதித்துப், திருமணம் நடத்தினர்.
திருமணத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
. இந்நிலையில், நடிகர் அர்ஜுன் தனது மகளின் திருமணத்திற்கு சீதனமாக வழங்கிய பொருட்கள் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன.
ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கோடிக்கணக்கில் செலவழிக்கப்பட்டது. ஜுன் 14ம் தேதி நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ரஜினி, ஷாலினி அஜித், சிவகார்த்திகேயன் என பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
அர்ஜுன் தனது மகளுக்கு ரூ. 500 கோடியில் சீதனம் வழங்கியதாக கூறப்படுகிறது. அதில், சென்னை போரூரில் உள்ள அவரது ஆடம்பர சொகுசு பங்களாவும் அடங்கும்.
சீதனம் வழங்கப்பட்டதைப் பற்றி சினிமா வட்டாரங்கள் கோடிக்கணக்கில் சொத்து வைத்திருக்கும் படைப்பு அர்ஜுனின் பேராற்றலை வெளிப்படுத்துகின்றன. மேலும், அர்ஜுனின் சொத்து மதிப்பு ரூ. 1000 கோடிக்கு மேல் இருப்பது குறிப்பிடத்தக்கது.